Publish Date: Fri, 05 Jul 2019 (15:35 IST)
Updated Date: Fri, 05 Jul 2019 (15:38 IST)
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து குளிர்நாடு என்பதாலும் தற்பொழுது அங்கு ஆட்டத்தின் இடையே மழை பெய்து வருவதாலும் அனைத்து தொடரில் பங்கேற்ற நாடுகளுக்கு பெரிதும் சவாலாக இருக்கிறது.
நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனி, ஒவ்வொரு போட்டியின் நடுவிலும் தனது பேட்டினை மாற்றுவது வாடிக்கை.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தற்பொது வெளியாகியுள்ளது. அதில் , தனது கிரிக்கெட் வாழ்வில் தனக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமான, அவர்களின் பேட் நிறுவனங்களின் முத்திரை பதித்த பேட்டை அடிக்கடி மாற்று பயன்படுத்துவதாகவும், அதற்காக இதுவரை எந்த தொகையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தோனியின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.