Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பலப்பரீட்சை – டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் !

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (15:13 IST)
உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று 4 ஆம் இடத்திலும் உள்ளன.

இதையடுத்து அந்த இரு அணிகளுக்கும் இடையிலானப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 5 போட்டியில் ஆஸியும் 2 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments