Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பலப்பரீட்சை – டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் !

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (15:13 IST)
உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று 4 ஆம் இடத்திலும் உள்ளன.

இதையடுத்து அந்த இரு அணிகளுக்கும் இடையிலானப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 5 போட்டியில் ஆஸியும் 2 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments