Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் – ஷகிப் உல் ஹசன் சவால் !

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (12:47 IST)
பங்களாதேஷ் அணியின் ஷகீப் உல் ஹசன் இந்தியாவைத் தங்கள் அணியால் வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வலிமை மிக்க தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகள் மிக முக்கியமானவை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி செல்ல முடியும்.

நேற்று ஆப்கானிஸ்தான் அணியோடு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் உல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘இந்தியா இதுவரை எந்தப் போட்டிகளிலும் தோல்வி அடையாமல் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவை எங்களால் எளிதாக வெல்ல முடியாது என எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்போம். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சில வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments