Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆஸ்.,வீரர்கள் 6 பேருக்கு ஓய்வு

Australia
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:54 IST)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
ஐசிசி உலகக் கோப்பை தொடர்  நிறைவடைந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா மற்றும் கேப்டன் மேத்யூ வேர்ட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர்  இந்தியாவில் நடந்து வருகிறது.
 
இதில், முதல்போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து விசாகபட்டினத்தில் நடந்த போட்டியிலும் இந்தியா வென்றது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
அதன்படி, ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல்,  ஷான் அபாட், ஜாஷ் இங்கிலிஸ், மார்க்ஸ் ஸ்டாய்னஸ் ஆகிய ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களுக்குப் பதிலாக, பென் மெக்டர்மோட், ஜாஷ் ஃபிலிப், கிரில் க்ரீன், பென் த்வர்ஷுயில் ஆகியோர் மீதமுள்ள 3 போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்''- ஆஸ்., கேப்டன் பேட் கம்மின்ஸ்