Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

189 ரன்களுக்குள் சுருண்ட ஜிம்பாப்வே… இந்திய பவுலர்கள் அபாரம்!

Advertiesment
189 ரன்களுக்குள் சுருண்ட ஜிம்பாப்வே… இந்திய பவுலர்கள் அபாரம்!
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:13 IST)
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று உள்ளது என்பதும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறித்து இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சீட்டுக்கட்டு போல விக்கெட்களை இழந்து தடுமாறிய ஜிம்பாப்வே 189 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி எஸ் கே வில் ஜடேஜாவுக்கு பதில் ரெய்னாவா?