Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த அணியைக் கொடுக்க வேண்டும்… யுவ்ராஜ் சிங் ஆலோசனை!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:47 IST)
வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

இந்த முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் இந்தமுறை இந்தியாவில் நடக்க உள்ள இந்த உலகக் கோப்பையை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் “ரோஹித் ஷர்மா சிறந்த வீரர், அவருக்கு சிறந்த அணியைக் கொடுக்கவேண்டும். தோனியும் சிறந்த வீரர்தான். ஆனால் அவருக்கு சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட அணி இருந்தது.  அதனால்தான் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வென்றது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments