Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (15:07 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நேற்று முதல் நாளில் எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணித் தடுமாறுமோ என்ற சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளனர்.

அதிலும் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலயில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஷுப்மன் கில்லின் முன்னாள் பயிற்சியாளருமான யுவ்ராஜ் சிங் கில் குறித்து “ சில விஷயங்கள் முன்பே எழுதபட்டுவிட்டன. கில், டெஸ்ட் கேப்டனாக உனது முதல் சதத்தை அடித்ததற்காக வாழ்த்துகள். உன்னுடைய பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளாய்.  உனது பேட் பேசியிருக்கிறது. இன்னும் நிறைய செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments