Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் குழந்தைகள் பள்ளி சென்றதும் அந்த பணிகளில் ஈடுபடுவேன்… யுவ்ராஜ் சிங் தகவல்!

என் குழந்தைகள் பள்ளி சென்றதும் அந்த பணிகளில் ஈடுபடுவேன்… யுவ்ராஜ் சிங் தகவல்!

vinoth

, செவ்வாய், 16 ஜனவரி 2024 (07:37 IST)
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

யுவ்ராஜ் சிங் ஹசல் கீச் என்ற மாடல் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யுவ்ராஜ் சிங் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் “என் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் நான் என்னுடைய பயிற்சிப் பணிகளை ஆரம்பிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு அஸ்வின் சரிபட்டு வரமாட்டார்- பிரபல வீரர் ஓபன் டாக்!