Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா!

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (13:26 IST)
இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளார்.


 
 
கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் உடனடியாக விலகினார். இது அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
 
கணுக்கால் காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.
 
சன் ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான யுவராஜ் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குகிறார். சிறிய இடைவெளிக்கு பின்னர் களம் இறங்கும் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் இந்த ஆட்டத்தில் கலக்குவார என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments