Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா!

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா!
, வெள்ளி, 6 மே 2016 (13:26 IST)
இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளார்.


 
 
கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் உடனடியாக விலகினார். இது அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
 
கணுக்கால் காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.
 
சன் ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான யுவராஜ் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குகிறார். சிறிய இடைவெளிக்கு பின்னர் களம் இறங்கும் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் இந்த ஆட்டத்தில் கலக்குவார என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னுடன் டேட்டிங் போகனும்: டுவிட்டரில் கேட்ட ரசிகைக்கு கெய்ல் என்ன சொன்னார் தெரியுமா?