Publish Date: Tue, 02 Nov 2021 (00:06 IST)
Updated Date: Tue, 02 Nov 2021 (00:09 IST)
உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடியது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர் பட்லர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.