Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை: அனுஷ்கா சர்மாவை ஏமாற்றி 1 ரன்னில் வெளியேறிய விராட் கோலி

உலகக் கோப்பை: அனுஷ்கா சர்மாவை ஏமாற்றி 1 ரன்னில் வெளியேறிய விராட் கோலி
, வியாழன், 26 மார்ச் 2015 (14:42 IST)
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி  1 ரன்னில் அவுட்டாகி மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மாவை ஏமாற்றினார்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. அற்புதமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித 89 பந்துகளில் [10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] சதம் விளாசினார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
அதேபோல மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் 5 பவுண்டரிகள் உட்பட அரைச்சதம் எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்கள் [11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] எடுத்த நிலையில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தனர்.
 
329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். மைதானத்திற்கு அனுஷ்கா சர்மா வந்திருந்ததால், பழையபடி சதம் அடித்து ‘ஃபிளையிங் கிஸ்’ பரிசளிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
 
ஆனால் 13 பந்துகளை சந்தித்த விராட் கோலி 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஜான்சன் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் ஹாடின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்கா சர்மா முகத்தில் சோகம் அப்பிக் கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil