Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் கே எல் ராகுல் விளையாடுவாரா?

Advertiesment
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் கே எல் ராகுல் விளையாடுவாரா?
, புதன், 3 மே 2023 (09:00 IST)
நேற்று முன் தினம் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.

பேட்டிங்கிலும் இக்கட்டான ஒரு சூழலில் 11 ஆவது வீரராகவே களமிறங்கினார். ஆனாலும் அவரால் ரன்கள் ஓடமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாமா என்பதை மருத்துவர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி கம்பீர் சண்டை… கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – ஹர்பஜன் சிங் வேதனை!