டாஸ் வெற்றி: மே.இ.தீ. முதலில் பேட்டிங் –கணக்கைத் தொடங்கிய அஸ்வின்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (10:32 IST)
இந்தியா மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மூன்றே நாட்களில் வெஸ்ட் இண்டீஸை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சற்று முன் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து செய்து விளையாடி வருகிறது.

சற்று முன்பு வரை அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் கைரன் பவல் 22 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் 12 ரன்களோடும் ஷாய் ஹோப் 5 ரன்களோயும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments