Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

vinoth
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (08:11 IST)
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இதற்காக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வருண் சக்ரவர்த்தி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே ரோஹித்- கில் தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடுவதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது.

இப்போது இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் “ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்ரவர்த்தியை அணிக்குள் கொண்டுவந்ததற்கான காரணம், இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த ஒரு பவுலர் தேவைப்படுகிறார். அந்த ஒரே காரணத்துக்காகதான் வருணை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments