20 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் அஸ்வின் ஏன்? கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:49 IST)
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அனுபவம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் உதவும். அவரிடம் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் திறன் உள்ளது. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.  உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவுக்கு பக்கபலமாக இருக்க மூத்த பவுலரான அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments