Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் அஸ்வின் ஏன்? கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:49 IST)
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அனுபவம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் உதவும். அவரிடம் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் திறன் உள்ளது. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.  உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவுக்கு பக்கபலமாக இருக்க மூத்த பவுலரான அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments