Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் கேப்டனா வரலைன்னா ஆர்சிபி கதி அவ்ளோதான்..! – ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

Prasanth Karthick
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (09:49 IST)
இந்த சீசனில் ஆர்சிபி அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப என்ன வழி என ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.



இந்த சீசன் தொடங்கியது முதலே ஆர்சிபியின் ஆட்டம் மோசமானதாக அமைந்து வருகிறது. நேற்றைய தோல்வியையும் சேர்த்து மொத்தம் 6 போட்டிகளில் 5 தோல்வியை ஆர்சிபி சந்தித்துள்ளது. ஆர்சிபியின் பேட்டிங் ஆர்டரும் வீக்காக உள்ளது. இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றிக்கு என்ன வழி என ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

அதில் அவர் “நான் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சொல்வேன். அப்படி செய்தால்தான் அந்த அணி குறைந்த பட்சம் வெற்றிக்காக போராடும். விராட் கோலி தன்னுடைய வீரர்களை கடுமையாக போராட வைப்பார். டூ ப்ளெசிஸ் அதை செய்ய வேண்டும். அவரால் சில ப்ளேயர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் சிலர் வெளியே அமர்திருக்கின்றனர். டூ ப்ளெசிஸ் கேப்டனாக இருப்பதால் கோலி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார். அவரை கேப்டனாக்கினால் இந்த அணி போராடும். பிறகு வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments