Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (11:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸி மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவரான கோலி ஒரே ஒரு சதத்தை தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பினார்.

கோலியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் அவர் அதிகமுறை  கேட்ச் கொடுத்து அவுட் ஆகி  வெளியேறுகிறார். ஆனால் அந்த பந்துகளை அடிக்காமல் விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவது நல்லது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் “கோலி ஆசைப்படும் வரை அவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும். அவர் ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்குதான் நஷ்டம். நாளைக்கேக் கூட அவர் ஒரு இரட்டை சதம் அடிக்கலாம். அந்த அளவுக்குத் திறமையான வீரர் அவர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments