Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றினார்.

கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் இந்த சீரிஸ் முழுவதும் அதிகமுறை அவுட் ஆகி  வெளியேறினார். ஆனால் அந்த பந்துகளை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் கோலி ஆஸி வீரர்களிடமும் ரசிகர்களிடம் ஆக்ரோஷமான மோதல்களில் ஈடுபட்டார். இது குறித்து பேசியுள்ள கோலியின் நெருங்கிய நண்பர் டிவில்லியர்ஸ் “கோலி சண்டை போடுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் தன் வாழ்வின் மோசமான ஃபார்மில் இருக்கும்போது இப்போது இதெல்லாம் தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. அவர் இப்போது இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments