Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தல” தோனியோட நம்பிக்கைக்குரிய தளபதி நான்! – விராட் கோலி நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:57 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி உடனான தனது அனுபவங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் கங்குலி, டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் காலம் முடிந்தபோது கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது. அப்போது புதிய தலைமுறையாக நுழைந்து இறங்கி கலக்கியவர்கள் தோனி, தினேஷ் கார்த்தி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர்..

முக்கியமாக எம்.எஸ்.தோனியின் பங்களிப்பு இந்திய அணியை மேன்மேலும் பல சாதனைகள் படைக்க செய்தது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கிய தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தோனியின் விலகலுக்கு பிறகு கேப்டன்ஷிப்பிற்கு ரசிகர்களால் அதிகமாக உதிர்க்கப்பட்ட பெயர் விராட் கோலி.

தோனிக்கு பிறகு விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். தற்போது கோலியின் லெகசியும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் புதியவர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ள விராட் கோலி “தோனியின் நம்பிக்கையை பெற்ற தளபதியாக இருந்ததே என் கிரிக்கெட் அனுபவத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருந்த காலகட்டம். எங்கள் பார்ட்னர்ஷிப் என்றும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments