Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் கோஹ்லி… கடைசி நேரத்தில் வெளியான தகவல்!

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் கோஹ்லி… கடைசி நேரத்தில் வெளியான தகவல்!
, செவ்வாய், 12 ஜூலை 2022 (16:19 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் விராத் கோலி பங்கேற்க மாட்டார் என்றும் காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது விராட் கோலி காயத்தில் இருந்து தேறிவிட்டார் என்றும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.200 முதல் ரூ.8 ஆயிரம் வரை..! – செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை தொடக்கம்!