இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியின் செய்கையால் கண்ணீர் வடித்துள்ளார்.
இது கடந்த 2013ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த பின்னர், உடைமாற்றும் அறையில் இருந்த சச்சினின் காலை விராட் கோலி தொட்டு வணங்கியுள்ளார்.
அதன் பிறகு, சச்சினிடம் கயிறு ஒன்றினைக் கொடுத்து, ’மறைந்த தந்தை எனக்கு அளித்தது. இதனை சிறப்பான நபர் ஒருவருக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த கயிறை உங்களுக்கு பரிசளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த செயலால் சச்சின் டெண்டுல்கர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியுள்ளது. பின்னர், சிறிது நாட்களில், அத கயிற்றை விராட் கோலியிடமே, சச்சின் டெண்டுல்கர் திருப்பி அளித்துள்ளார்.