விராட் கோலி ஒரு கஞ்சன்: அம்பலப்படுத்திய யுவராஜ் சிங்!
விராட் கோலி ஒரு கஞ்சன்: அம்பலப்படுத்திய யுவராஜ் சிங்!
Publish Date: Tue, 13 Sep 2016 (11:41 IST)
Updated Date: Tue, 13 Sep 2016 (11:44 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே விராட் கோலி தான் மிகப்பெரிய கஞ்சன் என அதிரடி வீரர் யுவராஜ் சிங் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து இயங்கி வரும் பண்பலை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பல சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில் வீரர்கள் ட்ரெஸ்சிங் ரூமில் நடக்கும் கலாட்டாக்களையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும் நட்சத்திர வீரர் விராட் கோலியை பற்றியும் பேசினார், இந்திய அணி வீரர்களிலேயே விராட் கோலிதான் மிகப் பெரிய கஞ்சன். கோலியுடன் எப்பொழுது வெளியே சென்றலும் நான்தான் செலவு செய்வேன். பணம் கொடுக்க வேண்டி அவரை வற்புறுத்த வேண்டும் என்றார்.
கோலியை போலவே ஆசிஷ் நெஹ்ராவும் கஞ்சத்தனமாக இருப்பார். எனக்கு திருமணமாகி விட்டது; இனி பணம் செலவு செய்ய இயலாது என்று கூறிக் கொண்டே இருப்பார். பல வீரர்கள் கஞ்சத்தனமாக இருப்பார்கள் அவர்கள் பெயரை கூர இயலாது என யுவராஜ் கூறினார்.