Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் 45 ஆவது சதம்... ரன்மெஷின் கோலியின் அடுத்த சாதனை

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:57 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, தன்னுடைய 44 ஆவது சதத்தை அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மூன்றாவது இறங்கிய இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, அதிரடியாக விளையாடி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

அடுத்த கட்டுரையில்
Show comments