Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாரா?... வெங்கடேஷ் ஐயர் கொடுத்த பதில்!

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (08:56 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது. அதனால்தான் அதன் பின்னர் கடந்த ஆண்டு நடந்த மெஹா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயார் எனக் கூறியுள்ளார். மேலும் “கேப்டன் என்பது வெறும் பட்டம் மட்டுமே. அதைவிடத் தலைமைப் பண்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. கேப்டனாக இருப்பதை விட அணியில் தலைவனாக இருப்பதே பெரிய விஷயம். தலைவனாக இருப்பதற்குக் கேப்டன் பட்டம் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments