Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி!

Advertiesment
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி!

vinoth

, சனி, 16 நவம்பர் 2024 (08:28 IST)
ஐபிஎல் மெஹா ஏலத்துக்கு அணிகளும் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். பதிவு செய்த வீரர்களில் 574 வீரர்களை மட்டும் ஏலத்துக்குத் தயார் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். இன்னும் சில நாட்களில் துபாயின் ஜெட்டா நகரில் இந்த ஏலம் நடக்கவுள்ளது.

முன்னணி வீரர்கள் இரண்டு செட்களாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட உள்ளன. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வயதான வீரராகவும் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வீரராகவும் உள்ளனர்.

கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும் இடது கை பேட்ஸ்மேனான இந்த வைபவ், பீகார் கிரிக்கெட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் தன்னுடைய 12 ஆவது வயதில் களமிறங்கி விளையாடி கவனம் பெற்றவர். இவர் இதற்கு முன்னர் மிகக் குறைந்த வயதில் முதல் தரக் கிரிக்கெட் ஆடியவர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். இதனால் அவரை ஐபிஎல் அணிகள் எடுக்க ஆர்வம் காட்டலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் சாமி இவரு.. ஒரே ஆளாக 10 விக்கெட்டையும் தட்டித் தூக்கிய அன்ஷுல் கம்போஜ்! - மிரண்டு போன மைதானம்!