Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!
, புதன், 19 ஜனவரி 2022 (10:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் உன்முக் சந்த் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பாஷ் போட்டித் தொடரில் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உலகின் பணம் கொட்டும் டி 20 தொடர்களில் முதலிடத்தில் உள்ளது. இதில் அனைத்து நாட்டு வீரர்களும் கலந்துகொள்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் இதுபோல நடக்கும் டி 20 தொடர் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

இதனால் சில வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து பின்னர் இதுபோன்ற தொடர்களில் கலந்துகொள்கின்றனர். அப்படி சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் உன்முக் சந்த் இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ளார். இந்த தொடரில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீரர் உன்முக் சந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி: வெற்றி பெறுவது யார்?