Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட்டில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தி… ரமீஸ் ராஜா கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்!

கிரிக்கெட்டில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தி… ரமீஸ் ராஜா கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்!
, திங்கள், 28 நவம்பர் 2022 (10:05 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா “இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆசியக் கோப்பையில் விளையாடாவிட்டால், பாகிஸ்தானும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பையில் விளையாடாது” எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் “கிரிக்கெட்டில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தி. இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்போம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கின்னஸில் நரேந்திர மோடி மைதானம்… ஐபிஎல் இறுதிப் போட்டி படைத்த சாதனை