Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னருக்கு உதவினாரா நடுவர் – எல்பிடபுள்யு விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சை!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:43 IST)
ஐபிஎல் போட்டிகளில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவுக்கு தினம்தோறும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

அக்டோபர் 27 ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 17 ஆவது ஓவரை சந்திப் சர்மா வீசியபோது அஸ்வினுக்கு எல்பிடபுள்யு அப்பீல் கேடக்ப்பட்டது.

ஆனால் அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இதனால் வார்னர் டிஆர் எஸ் கேட்கலாமா என யோசித்தார். ஆனால் அதற்குள் நடுவர் அனில் சௌத்ரி பந்து பேட்டில் பட்டு பிறகுதான் பேடில் பட்டது எனக் கூறினார். இதனால் வார்னர் அப்பீல் செய்யவில்லை. இது கிரிக்கெட் விதிமுறைகளின் படி தவறானது. இதனால் இப்போது நடுவர் ஒரு தரப்பாக செயல்பட்டார் என்ற சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments