Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இரண்டு பந்துகள் இருந்ததால் குழப்பம்

Advertiesment
இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இரண்டு பந்துகள் இருந்ததால் குழப்பம்
, திங்கள், 21 மார்ச் 2016 (17:08 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பெண்கள் டி 20 உலகக்கோப்பைப் போட்டியின்போது மைதனாத்தில் இரண்டு பந்துகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
 

 
பெண்கள் டி 20 உலகக்கோப்பை போட்டியில் ’பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டெல்லி பெரோஸ்கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை [19-03-16] மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
இதில், போட்டியின் 16ஆவது ஓவரை நிடா தர் வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தை நிடா தர் புல் டாசாக வீசினார். அதனை எதிர்கொண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், எல்லைக்கோட்டிற்கு அருகே இரண்டு பந்துகள் கிடந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.
 
ஆனால், சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் வீராங்கணைகள் சரியான பந்தை எடுத்து வீசினர்.
 
வீடியோ கீழே:
 
 

Share this Story:

Follow Webdunia tamil