Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்..! – ஈடு கொடுக்குமா ஆர்சிபி?

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:01 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

முன்னதாக 2 போட்டிகளில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டிலுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என்பதால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஆர்சிபி அணி இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது இருப்பதால் ஆர்சிபிக்கு இது முக்கியமான போட்டியாக அமையும். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments