Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? – சிஎஸ்கே – ஆர்சிபி இன்று மோதல்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:25 IST)
நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

நடப்பு ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் விசில் போடு சென்னை சூப்பர் கிங்ஸும், இ சாலா கப் நமதே ராயல் சேலஞ்சர்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 போட்டிகளிலும் வென்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்த அனைத்து போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே வென்று முதலிடத்தை பிடிக்குமா அல்லது தொடர்ந்து வெற்றி பெற்று ஆர்சிபி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இன்றைய போட்டி பரவலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments