Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPL 2025: முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய திருப்பூர் தமிழன்ஸ்! - 16 ஓவரில் மண்ணைக் கவ்விய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

Prasanth K
புதன், 2 ஜூலை 2025 (09:47 IST)

TNPL போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த ப்ளே ஆப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

 

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்திரசாமி சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். அதன்பின்னர் 203 ரன் டார்கெட்டில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆரம்பம் சிறப்பாக தொடங்கினாலும் 9 வது ஓவர் முதலாக ஓவருக்கு ஒரு விக்கெட் என விக்கெட்டை இழக்கத் தொடங்கியது.

 

16.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சேப்பாக்கம் அணி 123 ரன்களுடன் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திருப்பூர் அணியை சேர்ந்த எசக்கிமுத்துவும், மதிவாணனும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

இதன்மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது திருப்பூர் தமிழன்ஸ்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வடிவிலானக் கிரிக்கெட்டிலும் அபாயமான வீரர்… பண்ட்டைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்!

சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளோம்… சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து வெளியான தகவல்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்… உள்ளே வரும் இளம் வீரர்கள்!

முகமது ஷமியின் விவாகரத்து வழக்கு… முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! ஒரே இன்னிங்ஸில் 820 ரன்கள் குவித்து சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments