Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகத்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான் !

ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகத்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான் !
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:12 IST)
ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல்  மாதங்களில் தொடங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய பல கோடிகள் கொடுத்துப் பெற்றுவருகின்றனர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் மிக அதிகவிலைக்கு எடுத்துள்ளனர்.

கர்நாடக வீரர் கே. கௌதமை ரூ. 25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை கிங்ஸ் அணி. ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு எடுத்துள்ளது பஞ்சாப் அணி. இந்திய வீரர் சச்சின் பேபிபை ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது பெங்களூரு அணி.

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் மிக அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கான ஆரம்பவிலை ரூ.75 லட்சம் ஆகும். அதன்பிறகு அவர் ரூ.16.25 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி. தமிழகத்தைச்சேர்ந்த ஹரி நிசாந்தை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 நம்பர் 1 பேட்ஸ்மேனை எடுக்க ஆளில்லை… ஆரம்ப விலைக்கே எடுத்த பஞ்சாப்!