Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்ஸர்… பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:22 IST)
இந்திய அணி நாளை இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக டி 20 போட்டியில் விளையாட உள்ளது.


இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

நாளை இந்த தொடரின் முதல் டி 20 போட்டி நடக்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக கில்லர் ப்ராண்ட் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இது சம்மந்தமான புதிய புகைப்படத்தை  பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கில்லர் நிறுவனம் முன்னணி ஆடை நிறுவனமாக விளங்கி வருகிறது.

இதற்கு முன்னர் எம் பி எல் நிறுவனம் கிட் ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments