Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு முடிவை அறிவிக்கும் போதெ கண்ணீர் விட்டு அழுத பங்களாதேஷ் வீரர்!

Advertiesment
வங்கதேசம்
, வியாழன், 6 ஜூலை 2023 (14:29 IST)
வங்கதேசத்தின் ODI கேப்டன் தமிம் இக்பால், இந்தியாவில் உலகக் கோப்பை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய 16 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கைக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த மூன்று ODIகளில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்ததற்கு பிறகு, இக்பால் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த முடிவை அவர் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு கலங்கினார்.

அவர் “என்னுடைய இறுதி கட்டத்துக்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த சிறந்ததை நான் கொடுத்தேன். நான் சர்வதேசக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சென்ற கார் விபத்து...!