ரஞ்சி கோப்பை தோல்விக்கு முழுக் காரணமும் கேப்டன் சாய் கிஷோர்தான் – தமிழக அணி பயிற்சியாளர் கோபம்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (11:34 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்த தொடரின் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரையிறுதியில் தமிழக அணி மும்பை அணியிடம் பரிதாபமாக தோற்றது. இதற்கு டாஸ் வென்று முதலில் பந்துவீசாமல் பேட் செய்வதாக அறிவித்த கேப்டன் சாய் கிஷோரின் முடிவுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது.

இப்போது அதே கருத்டஹி தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னியும் தெரிவித்துள்ளார். அவர் “ஒரு மும்பைக் காரனாக இந்த மைதானத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அதனால் முதலிலேயே நாங்கள் டாஸ் வென்றால் பந்துவீச வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். ஆனால் எங்கள் கேப்டன் வேறொரு முடிவை எடுத்துவிட்டார். இந்த போட்டி ஆரம்பித்த ஒரு மணிநேரத்திலேயே தோற்று விட்டோம். அதிலிருந்து மீளுவது கடினமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments