Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது மிகவும் தவறு… மூத்த வீரர் கண்டனம்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (07:05 IST)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சமீபத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அந்த போட்டியில் அவருக்கு பதிலாக அணியில் இணைந்த ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசியதால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆனாலும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது தவறான முடிவு என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய அவரது பேட்டியில் “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 23 ஓவர்கள் மட்டுமே வீசினார். அப்படி இருக்கும் போது அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளித்தது தவறான முடிவு. நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி. ஒருவேளை இந்த போட்டியை இந்திய அணி தோற்றிருந்தால் கடைசி போட்டி தொடரை முடிவு செய்யும் போட்டியாக அமைந்திருக்கும். பும்ராவுக்கு ஓய்வளிக்கும் முடிவை என் சி ஏ எடுத்ததோ அல்லது பும்ராவே எடுத்தாரா , அது அணிக்கு நன்மை பயக்கும் முடிவு இல்லை. ஆனாலும் நான்காவது போட்டியில் இந்திய அணியின் வெற்றி அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments