Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

Senthil Vela
சனி, 27 ஏப்ரல் 2024 (14:56 IST)
நடப்பு 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான தூதராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது தனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பதாகக் கூறினார். 
 
டி-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டி-20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், ஜமைக்காவை சேர்ந்த அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தூதராக நியமனம் செய்திருந்தது.
 
இந்நிலையில் முதல் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங், நடப்பு 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ALSO READ: கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
 
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது தனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பதாகக் கூறினார். மேலும், நியூயார்க்கில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments