Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருளின் முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும்… ஆஸி தொடர் குறித்த நம்பிக்கையோடு சூர்யகுமார்!

இருளின் முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும்… ஆஸி தொடர் குறித்த நம்பிக்கையோடு சூர்யகுமார்!
, வியாழன், 23 நவம்பர் 2023 (07:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு அணிகளிலும் சீனியர் வீரர்கள் விலக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்திய அணியினருடன் இணைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இளம் வீரர்கள் கொண்ட அணி குறித்து மிகவும் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

அதில் “உலகக் கோப்பை தோல்வியில் இருந்து அடுத்த நாளே வெளிவருவது எளிதில்லை. நாங்கள் அந்த தொடரில் பெருமை பட கொள்ளத்தக்க வகையில்தான் விளையாடினோம். ஆனால் நாளையும் சூரியன் உதிக்கும். நிச்சயம் இருளின் முடிவில் வெளிச்சம் வரும். நாம் அந்த தோல்வியில் சிக்கிக் கொள்ளாமல் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும். இளம் வீரர்கள் கொண்ட அணியோடு களமிறங்குவதால் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ODI- சர்வதேச தரவரிசை பட்டியலில் கோலி, ரோஹித் முன்னேற்றம்!