Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களை திட்டியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… இது எப்ப?

vinoth
சனி, 27 ஜூலை 2024 (15:15 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை அணிக்குக் கேப்டனாக விஜய் ஹசாரே தொடரை வழிநடத்தினார் சூர்யா. அப்போது மும்பை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்தது. கேபட்னாக சூர்யா ஒழுங்காக நடக்கவில்லை என வீரர்களும் அணி மேலாளரும் அவர் மேல் குற்றம்சாட்டினர். அதனால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் “அந்த சூர்யகுமார் வேறு, இப்போது இருப்பவர் வேறு” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments