Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

Advertiesment
இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

vinoth

, ஞாயிறு, 5 ஜனவரி 2025 (07:29 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணிக்கு இலக்காக 162 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது, இதனால் இந்த போட்டி மூன்று நாட்களில் முடியவுள்ளது.

இந்நிலையில் சிட்னி மைதானம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “எப்போதும் இந்திய மைதானங்களை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் குறை சொல்வார்கள். ஆனால் சிட்னியில் முதல் நாளில் மைதானத்தில் இருந்த புற்களைப் பார்த்திருந்தால் மாடுகள் மேயத் தொடங்கியிருக்கும். அன்று நடந்ததைப் போல ஒரே நாளில் 15 விக்கெட்கள் விழுந்திருந்தால் அதைப் பெரிதாக்கி இருப்பார்கள்” என விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பந்து வீசாத பும்ரா… வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!