Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

vinoth
செவ்வாய், 6 மே 2025 (09:24 IST)
கடந்த ஐபிஎல் தொடரில் காட்டடியாக விளையாடி இறுதிப் போட்டிவரை சென்று ரன்னர் ஆனது சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைக் கொண்டுவந்தனர்.

இதன் காரணமாக அந்த அணியின் போட்டிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அவர்களுக்கு அந்த அதிரடி ஆட்டமுறைக் கைகொடுக்கவில்லை.  தொடர்ந்து தோல்விகளாகப் பெற்று வந்த அவர்கள் ப்ளே ஆஃப் செல்வதற்கு இருந்த கடைசி வாய்ப்பையும் நேற்று இழந்தனர்.

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டி மழைக் காரணமாக முடிவு தெரியாமல் கைவிடப்பட்டதால், இனிமேல் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியாத சூழல் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments