Publish Date: Wed, 18 Nov 2020 (10:16 IST)
Updated Date: Wed, 18 Nov 2020 (10:34 IST)
இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ள சுதிப் தியாகி தனது 33 ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்தியாவுக்காக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமானார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுதீப் தியாகி. சர்வதேசப் போட்டிகளில் இவர் சிறப்பாக தாக்கம் செலுத்தவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்றார். மேலும் சிஎஸ்கே அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா ஆகியொருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.