Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு எதிரான பதற்றம் தெளிந்தது… அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:40 IST)
இந்திய வீரர் அஸ்வினுக்கு எதிராக சரியாக விளையாடாமல் அவுட் ஆன ஸ்டீவ் ஸ்மித் இப்போது அவரது பந்தை எதிர்கொள்ள தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பிளேயர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தான். 60 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் அவரை நவீன கால டெஸ்டின் பிராட்மேன் என வர்ணிக்கின்றனர் விமர்சகர்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதுவும் அஷ்வின் பந்தில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள ஸ்மித் ‘நான் சுழல்பந்தை ஆக்ரோஷமாக விளையாடுவேன். எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் அதற்கு எதிராக நடந்துள்ளது. இரு முனைகளைக் கொண்ட கத்தியை போன்ற சவால் இது. என்னால் மீண்டும் திரும்ப முடியும் என நினைக்கிறேன். அஷ்வினை தவிர எந்தவொரு பவுலரும் இப்படி என்னை நிலைதடுமாற வைத்ததில்லை’ என இரண்டாவது டெஸ்ட் முடிந்ததும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்த முறை நீண்ட நேரம் களத்தில் நின்று அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இதற்கு முன்னர் அவர் பதற்றமடைந்ததில்லை. இந்த போட்டியில் நான் நிதானமாகிவிட்டேன். அதனால் எனக்குள் உற்சாகம் வந்துவிட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்