ஓவல் மைதானத்தில் இவர்களை எதிர்கொள்வதுதான் சவாலாக இருக்கும்… ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:15 IST)
இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தயாராகி வருகின்றன. இரு அணி வீரர்களும் லண்டனில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸி அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால் அந்த அணிக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. 7 ஆம் தேதி தொடங்கவுள்ள போட்டி பற்றி ஆஸி அணியின் துணைக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

அதில் “ஓவல் மைதானத்தில் சுழல் பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை உருவாக்க முடியும். அதனால் இந்தியாவின் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். ஆஸி அணிக்கு எதிராக இவ்விருவரும் மிகச்சிறப்பாக பந்து வீசி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments