Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட டயலாக் பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர் – ட்விட்டரில் வைரல்

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (13:31 IST)
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்றதை குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் ட்விட்டரில் விஜய் பட டயலாக்கை பதிவிட்டுள்ளார்.

நேற்று நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்தை இலங்கை வெல்லவே முடியாது என்றிருந்த நிலையில் அபாரமான பந்துவீச்சினால் இங்கிலாந்தை நாலாபக்கமும் சிதறவிட்டு வெற்றிக்கொடி நாட்டியது இலங்கை அணி. இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் “டேய் மார்கன், எப்போ வந்தோம்கிறது முக்கியம் இல்லடா, புல்லட் எப்படி எறங்குதுங்கிறதுதான் முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் “ஹேப்பி பர்த் டே தளபதி. பிகில் போஸ்டர் சும்மா தெரிக்குது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது நண்பா” என கூறியுள்ளார்.

இவரது இந்த ட்வீட் தளபதி ரசிகர்கள் இடையேயும், கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments