Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு எதிராக மூன்று புதியவர்களை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா – அனல்பறக்கும் ஆட்டம் அடுத்த மாதம்

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:34 IST)
அடுத்த மாதம் நடக்க இருக்கும் சுற்றுத்தொடர் ஆட்டத்தில் இந்திய அணியை வெற்றி பெற பலமாக தயாராகி வருகிறது தென் ஆப்பிரிக்க அணி.

தென் ஆப்பிரிக்க அணி வரும் செப்டம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் 20 ஓவர்கள் கொண்ட டி20 தொடர் மூன்று ஆட்டங்களும், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடர் மூன்று ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா பலத்த அடி வாங்கியதால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியாவுடன் விளையாட உள்ளதாக் இளம் வீரர்கள் மூன்று பேரை அணியில் இணைத்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

உலக கோப்பையில் கேப்டனாக இருந்த பாப் டு ப்ளசிஸ் இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக தொடர்கிறார். விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக் நார்சே, ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி, விக்கெட் கீப்பர் ரூடி செகண்ட் ஆகியோர் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா தனது பந்து வீச்சில் வலைமையை காட்டி இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டிருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான இந்த போட்டி அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments