Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பேட்டிங் எனக்கே திருப்தியில்லை – ஒத்துக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:04 IST)
ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒத்துக்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி பிளே ஆஃப் செல்லாமலேயே தொடரில் இருந்து விலகியது. இதனால் அந்த அணியின்  கேப்டன் ஸ்மித்தின் கேப்டன்ஸி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவரின் பங்களிப்பு மோசமானதாக இருந்தது.

இந்நிலையில் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள அவர் ‘ஐபிஎல் தொடரில் நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நான் சில போட்டிகளில் சுமாராக விளையாடினேன். ஆனால் நான் ஒருபோதும் சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் நான் சற்று சொதப்பினேன்.இந்திய அணிக்கு எதிரான தொருக்கு முன்னாதாக நான் பயிற்சியில் இறங்குய போது நான் தவறவிட்டதை திரும்ப பெற்றதாக உணர்கிறேன்.  அப்போதுதான் என் முகத்தில் மிகப்பெரிய சிரிப்பு வந்துள்ளது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments