Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாட வேண்டும்… ஹர்பஜன் சிங் பரிந்துரைக்கும் இளம் வீரர்!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (09:30 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் வளரும் நட்சத்திரமாக உருவாகி வருகிறார் சுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுப்மன் கில் இப்போது இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக உள்ளார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் எதிர்காலமாக இருப்பார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் “கில் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். எப்போதும் தன்னை முன்னேற்றிக்கொள்ளும் முனைப்புடன் ஆடுபவர். அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் ஆடவேண்டும் என்பதே என் ஆசை. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அவரை நாங்கள் எங்கள் வீட்டுப் பையனாகவே பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments